×

அரசு பள்ளிகளில் 1,588 மாணவர்கள் சேர்க்கை ஈரோடு சுப்பு படங்களுக்கான புட்நோட் கணவர் மாயம்: மனைவி புகார்

 

ஈரோடு: அம்மாபேட்டை அடுத்துள்ள குருவரெட்டியூர், ஆணைக்கவுண்டனூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் பெருமாள் (48). இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். கடந்த 7 மாதங்களாக பெருமாளுக்கு குருவரெட்டியூரை சேர்ந்த விஜயா என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது. இதை குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர்.

இதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற பெருமாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் இல்லாததால் மனைவி சந்திரா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பள்ளிகளில் 1,588 மாணவர்கள் சேர்க்கை ஈரோடு சுப்பு படங்களுக்கான புட்நோட் கணவர் மாயம்: மனைவி புகார் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Anaekoundanur South Road ,Guruvarettyur ,Ammapet ,Chandra ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்